ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை சுகாதார வழிமுறைகளை பின்பற்றியதாக நடைபெற்றுவருகின்றது

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை மட்டக்களப்பு மாவட்டத்தில் சுகாதார வழிமுறைகளை பின்பற்றியதாக நடைபெற்றுவருகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஐந்து கல்வி வலயங்களிலும் இன்று காலை புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் இன்றைய தினம் சுகாதார வழிமுறைகள் கடுமையான முறையில் கடைப்பிடிக்கப்பட்ட நிலையில் மாணவர்கள் பாடசாலைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

இன்றைய தினம் பெருமளவான மாணவர்கள் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றுவதற்கு ஆர்வத்துடன் கலந்துகொண்டதை காணமுடிந்தது.

இன்று காலை ஆலயங்களில் வழிபாடுகளை மேற்கொண்ட பரீட்சார்த்திகள் பெரியவர்களிடம் ஆசிர்வாதத்தினைப்பெற்றதன் பின்னர் பரீட்சை நிலையங்களுக்கு செல்வதை அவதானிக்கமுடிந்தது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஐந்து கல்வி வலயங்களிலும் உள்ள 103பாடசாலைகளில் இன்றைய தினம் பரீட்சைகள் நடைபெறவுள்ள நிலையில் 13பாடசாலைகள் இணைப்பு நிலையங்களாக செயற்படுவதுடன் 10126மாணவர்கள் இன்று ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் தோற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *