கடலட்டைப் பண்ணை அமைப்பதற்கான முதலீடுகளை பெற்றுக்கொடுத்தார் அமைச்சர் டக்ளஸ்!

பூநகரி, கௌதாரிமுனை பகுதியில் கடலட்டைப் பண்ணை அமைப்பதற்கான ஆர்வத்தினை வெளியிட்ட பிரதேசத்தினை சேர்ந்த சுமார் 52 தொழில்முனைவோருக்கான ஆரம்ப முதலீடுகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் தனியார் முதலீட்டாளர்களிடம் இருந்து பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வு பூநகரி – நாச்சிக்குடாவில் நேற்று (21) இடம்பெற்றுள்ளது.

மேலும், குறித்த தனியார் முதலீடடாளர்களுக்கும் தொழில் முனைவோருக்குமான ஒப்பந்தங்கள் இதன்போது கைச்சாத்திடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *