கொரோனா, காலநிலை மாற்றம் உள்ளிட்டவற்றால் மோசமான நிலையில் உலகம்! – ஐ.நா.

கொரோனா தொற்று நோய், காலநிலை மாற்றம் உள்ளிட்ட காரணிகளால் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட உலகம் தற்போது மோசமாக கட்டத்தில் இருப்பதாக ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.

புவிசார் அரசியல் பதட்டங்கள் எல்லா இடங்களிலும் மோதல்களைத் தூண்டியுள்ளன. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நினைப்பதைப் போன்று ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமிக்காது என்று தான் கருதுகின்றேன்.

என்னுடைய இரண்டாவது பதவிக் காலத்தில் தொடர்ந்தும் அமைதியை வலியுறுத்துவேன். பூசல்களைத் தடுக்க பாடுபடுவேன். உலகளாவிய ஏற்றத்தாழ்வுகளைச் சமாளிக்க முயற்சி எடுப்பேன்.

எனினும் என்னால் சமாதானத்தை ஊக்குவிக்கவும் பிணக்குகளைத் தவிர்க்கவும் உலக நாடுகளுக்கு இடையே மத்தியஸ்தம் செய்ய மட்டுமே முடியும்.

அதனைத் தாண்டி ஐ.நா.வின் பொதுச்செயலாளருக்கு அதிகாரம் இல்லை.

தற்போதைய கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் பல வளரும் நாடுகள் எதிர்கொண்டுவரும் சிக்கல்கள் குறித்து அவர் கவலை வெளியிட்டார்.

வளரும் நாடுகளில் மிகக் குறைவான வளங்கள் உள்ளன. ஆவர்களின் கடன்கள் தகுதிக்கு மீறி அதிகரித்து வருகின்றன.

இவ்வாறான நாடுகள் வளர்ச்சியடைந்த ஐரோப்பா அல்லது வட அமெரிக்காவை விட அதிக வட்டி விகிதங்களை செலுத்துகின்றன.

அத்துடன், இவ்வாறான நாடுகளுக்கு போதியளவு தடுப்பூசிகள் கிடைக்கவில்லை. காலநிலை மாற்றத்தின் தாக்கங்களையும் அதிகளவில் வளரும் நாடுகள் அனுபவித்து வருகின்றன அவர் கவலை வெளியிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *