மின்வெட்டு குறித்த முக்கிய அறிவிப்பு இன்று நண்பகல் வெளியாகின்றது!

மின்வெட்டு அமுல்படுத்தப்படுமா என்பது தொடர்பில் இன்று(சனிக்கிழமை) நண்பகல் அறிவிக்கப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

சபுகஸ்கந்த மின் நிலையத்திலுள்ள எரிபொருள் இன்னும் சில மணித்தியாலங்களுக்கு போதுமானதாக இருக்கும் எனவும், பிற்பகல் 2 மணியளவில் அனைத்து எரிபொருட்களும் தீர்ந்துவிடும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில் எரிபொருளை விநியோகிக்குமாறு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் கோரப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

அவ்வாறு தொடர்ந்தும் எரிபொருள் விநியோகம் செய்யப்பட்டால் மின்வெட்டினை அமுல்படுத்தப்பட வேண்டிய அவசியமில்லை என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஏற்கனவே 10,000 மெற்றிக் தொன் டீசலை மின் உற்பத்திக்காக களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்திற்கு வழங்கியுள்ளது என்பதுக் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *