மறு அறிவித்தல் வரை ஒருநாள் சேவையை நிறுத்தும் பரீட்சைகள் திணைக்களம்!

பரீட்சை சான்றிதழ்களை வழங்கும் ஒரு நாள் சேவையை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன இதனை தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, சான்றிதழ்களைப் பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை இணைய அமைப்பு மூலமாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ செயலியான “DoE” மூலமாகவோ சமர்ப்பிக்கலாம்.

தேவைக்கு ஏற்ப, சான்றிதழ்கள் விரைவு அஞ்சல்(ஸ்பீட் போஸ்ட்) மூலம் வெளியுறவு அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டு, விண்ணப்பதாரரின் முகவரிக்கு அனுப்பப்படும் என்று தர்மசேன குறிப்பிட்டுள்ளார்.

திணைக்களத்திற்குள் பிரவேசிப்போரின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவும், பணியாளர்கள் மத்தியில் கொரோனா பரவுவதைத் தடுக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *