
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று பிற்பகல் அலரி மாளிகையில் வைத்து கொழும்பு றோயல் கல்லூரிக்கு புதிய பேருந்தொன்று வழங்கிவைக்கப்பட்டது.
கீர்த்தி மந்த்ரிரத்னனின் அன்பளிப்பாக வழங்கப்பட்ட இப்பேருந்து ஜப்பானில் தயாரிக்கப்பட்ட 54 ஆசனங்களை கொண்ட சொகுசு பேருந்தாகும்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கொழும்பு றோயல் கல்லூரியின் அதிபர் எம்.வீ.எஸ்.குணதிலகவிடம் பேருந்தின் திறவுகோலினை வழங்கிவைத்தார்.
இப்பேருந்தினை அன்பளிப்பாக வழங்கிய கீர்த்தி மந்த்ரிரத்னவுக்கு பிரதமர் நினைவு சின்னமொன்றை வழங்கியதுடன், கொழும்பு றோயல் கல்லூரியின் அதிபர் எம்.வீ.எஸ்.குணதிலவால், பிரதமருக்கு நினைவு பரிசொன்று வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி பிரேமனாத் சீ தொலவத்த, கொழும்பு றோயல் கல்லூரியின் துணை அதிபர் கிரிஷாந்த சில்வா, கல்லூரியின் பெற்றோரை பிரதிநிதித்துவப்படுத்தி மஹேஷ் குணரத்ன உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

