வல்வெட்டித்துறையில் மாயமான மீனவர்கள் கண்டுபிடிப்பு; எட்டுமணி நேரத்தில் கரை திரும்புவர்

வல்வெட்டித்துறையிலிருந்து மீன்பிடிக்க சென்று காணாமல் போயிருந்த மீனவர்கள் இருவர், சற்று முன்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 37 வயதுடைய சுந்தரலிங்கம் கெங்காரூபன், 41 வயதான தவராசா சுதர்சன் ஆகிய இருவரும் நேற்றுக் காலை மீன்பிடிப்பதற்காகச் சென்றிருந்தனர்.

நேற்று மாலை கரை திரும்பவேண்டிய அவர்கள் இன்று வரை கரை திரும்பாமை தொடர்பில் குடும்பத்தாரால் பொலிஸ் நிலையத்திலும் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களுக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து ஏற்கனவே கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களுக்கும் தகவல் வழங்கப்பட்டது.

அத்துடன், கரையிலிருந்தும் தேடுதலுக்காக மீனவர்கள் சென்றிருக்கின்றனர்.

இந்நிலையல் குறித்த மீனவர்கள் இருவரும் சற்று முன்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

இதனை பருத்தித்துறை சுப்பர்மடம் பகுதி மீனவர்கள் கரையில் உள்ளவர்களுக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

அவர்களின் தகவலின் அடிப்படையில், குறித்த மீனவர்கள் நிலைகொண்டுள்ள கடலின் தொலைவின் அடிப்படையில் அவர்கள் இருவரும் கரை திரும்ப எட்டு மணிநேரம் ஆகலாம் என்று தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *