வழிப்பறிகளில் ஈடுபட்ட மூவர் பொலிஸ் பிடியில்!

சுன்னாகம் மற்றும் இளவாலையில் பட்டப்பகலில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூவர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து கொள்ளையிடப்பட்ட 7 பவுண் நகைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.
வீதிகளில் செல்லும் பெண்களிடம் நகைகள் அபகரிக்கப்படுவது தொடர்பில் அண்மையில் சுன்னாகம் மற்றும் இளவாலை பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இது தொடர்பில் யாழ்ப்பாணம் மூத்த பொலிஸ் அத்தியட்சகருக்கு கீழான மாவட்டக் குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவு விசாரணைகளை முன்னெடுத்தது. பிரிவின் பொறுப்பதிகாரி தலைமைப் பொலிஸ் பரிசோதகர் நிகால் பிரான்சிஸ் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் புத்தூரைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்களிடம் இருந்து 7 பவுண் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேக நபர்களிடமிருந்து நகைகளைக் கொள்வனவு செய்த சுன்னாகம் மற்றும் யாழ்ப்பாணம் நகர நகைக்கடை உரிமையாளர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *