கொக்காவில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்து; ஒருவர் படுகாயம்

வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற ஹயஸ் வாகனம் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து கொக்காவில் பகுதியில் விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இன்று (22) பிற்பகல் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற ஹயஸ் வாகனம் ஒன்று கொக்காவில் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த போது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது. குறித்த விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply