வவுனியா தோனிக்கல்லில் எரிவாயு அடுப்பு வெடிப்பு  – பொலிஸார் விசாரணை

வவுனியா தோனிக்கல் திருவள்ளுவர் வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் எரிவாயு அடுப்பு வெடித்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் உள்ள வீடு ஒன்றில் முதியவர் ஒருவர் நேநீருக்காக தண்ணீர் வைத்துக்கொண்டிருந்த போதே  திடீரென் எரிவாயு அடுப்பு வெடித்துள்ளது.

இதனையடுத்து வீட்டார் எரிவாயு சிலிண்டரை பாதுகாப்பாக அகற்றி மேலதிக அனர்த்தம் ஏற்படுவதை தடுத்துள்ளனர். அத்துடன் குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் தடவியல் பொலிஸாரின் உதவியுடன் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply