
இரத்தினபுரி மாவட்டத்தில் சுரங்கத் தொழிலாளர்கள், தேயிலைத் தொழிலாளர்கள் மற்றும் தினக்கூலி பணியாளர்கள் மூட்டு அழற்சி நோயினால் (Arthritis) அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
இரத்தினபுரி போதனா வைத்தியசாலையின் பிசியோதெரபிஸ்ட் மிதுன் செனவிரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் உள்ளவர்கள் சரியான சிகிச்சை பெறாததால் மூட்டுகளில் குருத்தெலும்பு அதிகமாகிறது எனவும் அவர் தெரிவித்தார்.