எனது வாழ்நாள் கனவு நிறைவேறியது – சமந்தா

நடிகை சமந்தா தனது வாழ்நாள் கனவு நிறைவேறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

சாகுந்தலம் திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த திரைப்படம் குறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து தெரிவித்துள்ள அவர், ‘என் சிறுவயதில் நான் விசித்திரமான கதைகளை நம்புவேன். இப்போதும்  நான் அதில் இருந்து மாறவில்லை.

இப்படி ஒரு சரித்திர படத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது வாழ்நாள் கனவு. அந்தக் கனவை நனவாக்கிய இயக்குனர் குணசேகரன் அவர்களுக்கு நன்றி’ எனத் தெரிவித்துள்ளார்.

சாகுந்தலம் என்ற நூலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் சமந்தா சகுந்தலையாக நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *