முதலாவது T20 போட்டி : மேற்கிந்திய தீவுகள் அணியிடம் மண்டியிட்டது இங்கிலாந்து

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு இருபது போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 9 விக்கெட்களால் வெற்றிபெற்றுள்ளது.

5 இருபதுக்கு இருபது போட்டிகள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இங்கிலாந்து அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது போட்டி நேற்று கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் இடம்பெற்றது.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி களத்தடுப்பை தெரிவு செய்ய, இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கியது.

எதிரணியின் பந்துவீச்சை எதிர்கொள்ளமுடியாமல் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்த இங்கிலாந்து அணியால் 19.4 ஓவர்களில் 103 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொள்ள முடிந்தது.

அவ்வணி சார்பாக துடுப்பாட்டத்தில் கிறிஸ் ஜோர்டான் அதிகபட்சமாக 28 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க பந்துவீச்சில் ஹோல்டர் 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

இதனை அடுத்து 104 என்ற வெற்றி இலக்கோடு பதிலளித்துஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 17.1 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கெட்டினை மாத்திரமே இழந்து வெற்றி இலக்கை கடந்தது.

ஷாய் ஹோப் 20 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்க பிராண்டன் கிங் 52 ஓட்டங்களையும் நிக்கோலஸ் பூரன் 27 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *