ஏ.சி பாவனையை முதலில் குறையுங்கள் – எப்போதும் மின்சாரம் துண்டிக்கப்படலாம்!

நிறுவனங்களில் குளிரேற்றிகளின் பாவனையை குறைக்க வேண்டும் என மின்சார பொறியியலாளர் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், நாம் ஒருபோதும் வேண்டுமென்றே மின்சாரத்தை துண்டிக்க மாட்டோம்,இயன்றவரை மின் துண்டிப்பை தவிர்ப்பதற்கு முயற்சி செய்து வருகிறோம்.

மக்களை புரிந்து கொண்டவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட மாட்டார்கள்.

தற்போது எண்ணெய் பற்றாக்குறை காரணமாக மின் துண்டிப்பு ஏற்படுகிறது.

நாளை மின்சாரம் துண்டிக்கப்படலாம் ஆனாலும் ,அவை குறுகிய நேரம் மட்டுமே.

செவ்வாய் ,புதன்கிழமைகளில் மின் துண்டிப்பு ஏற்படுமாயின் மக்களிற்கு நாங்கள் அறிவிக்கின்றோம்.

மின் துண்டிப்பு எவ்வளவு நேரம் தொடரும் என திட்டவட்டமாக கூறமுடியாது..

ஏனென்றால் இப்போது 2 மணித்தியாலம் துண்டிக்கப்படும் என கூறி ஒரு மணித்தியாலம் மட்டும் துண்டித்தால் பரவாயில்லை. ஆனால் இரண்டு மணியாலத்தை விட அதிகரித்தால் அது ஒரு பிரச்சினையாக காணப்படும்.

கொமிஷன் அடிக்கவே அரிசியை இறக்குமதி செய்கிறார்கள்! விவசாயிகள் கூட்டமைப்பு குற்றசாட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *