தாயை இழந்த வேதனையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட யுவதி!

மட்டக்களப்பில் இளம் யுவதி ஒருவர் தனது தாயை இழந்த வேதனையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொக்கட்டிச்சோலை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட காஞ்சிரங்குடா, சில்லிக்குடியாறு கிராமத்தைச்சேர்நத பாக்கியராசா மாலினி எனும் 15 வயதுடைய யுவதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குறித்த யுவதியின் தாயார் மரணமடைந்திருந்ததாகவும் தான் தனது தாயை இழந்துள்ளதாகவும் அதனால் தானும் தற்கொலை செய்யப்போவதாக நீண்ட நாட்களாக கூறிவந்த நிலையில் அவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்ததாக ஆரம்பக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Advertisement

மட்டக்களப்பு நீதிமன்ற நீதிவான் உத்தரவிற்கமைவான சம்பவ இடத்திற்கு சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சம்ப இடத்திற்கு சென்று சடலத்தை பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தும் படி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸாரும் தடயவியல் பொலிஸாரும் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *