4 மணித்தியாலங்களுக்கு மின்சாரம் துண்டிப்பு – முக்கிய அறிவிப்பு

நாட்டில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் 4 மணித்தியாலங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இந்த விடயம் குறித்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அந்த சபையின் ஏற்பட்டாளர் ரஞ்சன் ஜயலால்நாளைமுதல் ஒரு மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டாலும் அதனை மேலும் இரண்டு மணி நேரமாக நீட்டிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அடுத்த வெள்ளிக்கிழமை வரை மட்டுமே இந்த செயன்முறையை தொடர முடியும் என்றும் அதன் பின்னர் இலங்கை மின்சார சபை நிச்சயமாக 4 மணித்தியால மின்வெட்டை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது வறட்சியற்ற காலநிலை நிலவுகின்ற போதிலும் நீர்மின் நிலையங்கள் முழு கொள்ளளவுடன் இயங்கி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் எதிர்காலத்தில் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு தேவையான நீரினை வழங்க முடியாத நிலை ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *