யாழ் சர்வதேச வர்த்தக சந்தையில் உள்ளூர் உற்பத்தியாளர்கள் புறக்கணிப்பா?

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் சர்வதேச வர்த்தக கண்காட்சியில் சிறு கைத் தொழில் முயற்சியாளர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக, உள்ளூர் முயற்சியாளார்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

யாழில் தொடர்ச்சியாக 3 நாட்கள் சர்வதேச வர்த்தக சந்தையும், கண்காட்சியும் இடம்பெற்று வருகிறது.

இந்த கண்காட்சியில், தெற்கில் உள்ள, நிறுவனங்கள் பலவற்று இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதை விடுத்து நிதி நிறுவனங்கள், மற்றும் பாரிய உற்பத்திகள் மேற்கொள்வோரை அறிமுகபடுத்தும் நிகழ்வாகவே இது அமைகிறது.

இதனால் உற்பத்திகளை மேற்கொள்ளும் உள்ளூர் வாசிகள், சந்தை படுத்துவதற்கான வாய்ப்பின்றி தவிக்கின்றனர் என கவலை வெளியிட்டுள்ளனர்.

[embedded content]

ஏ.சி பாவனையை முதலில் குறையுங்கள் – எப்போதும் மின்சாரம் துண்டிக்கப்படலாம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *