
சீனாவுக்கு எதிராக இந்து பசுபிக் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நிறுவுவது தொடர்பாக ஜப்பான்-அமெரிக்கா அண்மையில் பாதுகாப்பு கூட்டுறவுகளை அதிகரிக்கும் விதமான ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டு இருந்தன.
இப்போது ஜப்பான் மற்றும் பிரான்ஸ் அதே விடயங்கள் தொடர்பாக ஒன்றிணைவதற்கு கலந்தாலோசித்து வருகின்றன.
இது தொடர்பாக கருத்து வெளியிட்டிருந்த ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் யோஷிமாச ஹயாஷி குறிப்பிடும் போது, திறந்த மற்றும் சுதந்திரமான இந்து பசுபிக் பிராந்தியத்தை நிறுவுவது தொடர்பாக பிரான்ஸ் மற்றும் ஐக்கிய நாடுகள் ஒன்றியத்துடன் ஜப்பான் கூட்டுறவுகளை அதிகரிப்பதற்கும் உறவு நிலைகளை அடுத்த கட்டத்திற்கு மேம்படுத்துவதற்கும் விரும்புகிறது என கூறியுள்ளார்.
கடந்த வியாழக்கிழமை இரண்டு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் மற்றும் பாதுகாப்பு அமைச்சர்கள் சந்தித்து கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டு இருந்தனர்.
இந்து பசுபிக் பிராந்தியத்தில் பிரான்ஸ் கணிசமான பங்களிப்பு வழங்கி வருவதோடு சில பிரதேசங்களை உரிமையாக கொண்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.