நாளை முதல் ஒரு மணித்தியால மின்சார விநியோகத் தடை! பொறியியலாளர்கள் அறிவிப்பு!

இலங்கையில் நாளையில் (24) இருந்து ஒரு மணித்தியால மின்சார விநியோகத்தடை நடைமுறைக்கு வரும் என்று மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் அறிவித்துள்ளது.

இந்தநிலையில் நாளை மறுதினம் 25ஆம் திகதி முதல் 4 கட்டங்களாக இரண்டு மணி்த்தியால மின்சார விநியோகத்தடை நடைமுறைப்படுத்தப்படும் என்றும் சங்கத்தின் உறுப்பினர் எரங்க குடாஹேவா தெரிவித்துள்ளார்

“யுகதனவி“ மின்சார நிலையத்தில் இன்னும் 10 நாட்களுக்கு மாத்திரமே உலை எண்ணெய் கையிருப்பில் உள்ளது.

2020 பெப்ரவரி 4ஆம் திகதியன்று எண்ணெய் கப்பல் ஒன்று இலங்கைக்கு வரவிருந்தது.

எனினும் அந்த கப்பலில் உலை எண்ணெய்யை தருவிக்கக்கூடிய வங்கி நாணயக்கடிதம் இன்னும் திறக்கப்படவில்லை.

எனவே அந்தக்கப்பல் உரிய திகதியில் வராதுபோனால் யகதனவி மின்சார நிலைய எண்ணெய் இருப்பு தீர்ந்துப்போய் விடும் என்றும் எரங்க குடாஹேவா தெரிவித்துள்ளார்.

Leave a Reply