மகனை வெட்டிக் கொன்று குப்பை தொட்டியில் எரித்த கொடூர சித்தி… விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்!!

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள காமாட்சிபுரம் கிராமத்தில் சாலையோரம் உள்ள குப்பைத் தொட்டியில் தீயிட்டு எரிக்கப்பட்ட நிலையில் ஆண் பிணம் கிடப்பதாக வந்த தகவலையடுத்து, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டார்.

குப்பை தொட்டியில் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தவர் தலையில் பலத்த காயம் மற்றும் உடம்பு முழுவதில் கம்பி உள்ளிட்ட இரும்பு ஆயுதங்களால் தாக்கி கொலை செய்து பின்பு தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளதாக தடயவியல் ஆய்வில் தெரிய வந்தது.

பிணமாக கிடந்த அந்த நபர், அதே ஊரை சேர்ந்த சிங்காரவேல் என்பவரின் முதல் மனைவி ராஜம்மாளின் மகன் செந்தில் என்பதும், 30 ஆண்டுகளுக்கு முன்பு இவரது தாய் உயிரிழந்த நிலையில் ஊரை விட்டு சென்றவர், பல்வேறு மாநிலங்களில் சாமியாராக கோவில்களில் வாழ்ந்து வந்ததாகவும் தெரிகிறது.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தனது சொந்த ஊரான பெரியகுளம் அருகே உள்ள காமாட்சிபுத்திற்கு வந்த அவர், அவரது பெயரில் இருந்த 4 ஏக்கர் நிலத்தை விற்றுள்ளார், விற்பனை செய்த சொத்தில் அவரின் தந்தையின் இரண்டாவது மனைவியான ரத்தினகிரி மற்றும் மகன் செல்வக்குமார் ஆகியோர் பங்கு கேட்டுள்ளனர்.

பங்கு தரமறுத்த செந்திலை ரத்தினகிரியும், செல்வக்குமாரும் சேர்ந்து வெட்டி கொலை செய்து, உடலை ஊரின் சாலையோரம் இருந்த குப்பை தொட்டியில் போட்டு பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துள்ளனர் என்பது தனிப்படை விசாரணையில் தெரியவந்தது.

தொடர் விசாரணையில் கணவரின் மூதல் மனைவியின் மகன் பெயரில் இருந்த சொத்தில் பங்கு கேட்டு தராததால் தாயும், மகனும் சேர்ந்து கணவரின் மூத்த மனைவியின் மகனை வெட்டி கொலை செய்து உடலை குப்பை தொட்டியில் போட்டு பெட்ரோல் ஊற்றி எரித்ததை ஒப்புகொண்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து கொலை செய்த தாய் மற்றும் மகன் அதற்கு உடந்தையாக இருந்த இரண்டு பேர் உள்ளிட்ட 4 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை பெரியகுளம் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைக்க காவல்துறையினர் கொண்டு சென்றனர்.

கணவரின் முதல் மனைவியின் மகனை இரண்டாவது மனைவியான தாயும் மகனும் சேர்ந்து வெட்டி கொலை செய்து குப்பை தொட்டியில் போட்டு பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்த சமபவம் பெரியகுளம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கில் கொலையாளிகளை 24 மணி நேரத்தில் கைது செய்து பெரியகுளம் காவல்துறையினர் சிறையில் அடைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *