சதோச விற்பனை நிலையத்தில் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு!

வவுனியாவில் அமைந்துள்ள சதோச விற்பனை நிலையத்தில் அத்தியாவசிப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக வர்த்தக அமைச்சர் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

நாடு பூராகவும் சதோச விற்பனை நிலையங்கள் ஊடாக அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படும்.

இந்நிலையில் வவுனியாவில் அமைந்துள்ள சதோச விற்பனை நிலையங்களுக்கு செல்லும் பலரும் அத்தியாவயசிப் பொருட்களை பெற முடியாது ஏமாற்றத்துடன் திரும்பி வருவதாக தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக சீனி, பால்மா மற்றும் சில அரிசி வகைகளுக்கு தட்டுப்பாடு காணப்படுவதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

பருப்பு மற்றும் பொன்னி அரசி என்பனவே அங்கு அதிகமாக கிடைப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

புதிய அரசமைப்புச் சட்டம் இந்த ஆண்டு முன்வைக்கப்படும்! பீரிஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *