ரணிலை நாட்டின் தலைவராக தெரிவு செய்யும் யோசனை!

நாட்டின் தலைவராக ரணில் விக்ரமசிங்கவை தெரிவு செய்ய வேண்டும் என்ற யோசனை கரந்தெனிய ஐக்கிய தேசியக் கட்சியின் அதிகார சபைக் கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தலைமையில் இந்த அதிகார சபைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் கரந்தெனிய அதிகார சபையின் தலைவர் நுவன் சோமரத்ன இந்த யோசனையை கொண்டு வந்ததுடன் அதிகார சபையின் குழு செயலாளர் மங்கள குமார அதனை ஆமோதித்தார்.

இந்த யோசனை அதிகார சபைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட போது, அனைவரும் அதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளதுடன் யோசனை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் ஒரு யாழ்ப்பாணம்: பெயர்பலகை திறப்பும் மாபெரும் பொங்கல் நிகழ்வும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *