
ஒமிக்ரான் தொற்றுப் பரவலை சுகாதார முறைகளை சரியாகக் கைக்கொள்வதன் மூலம் மாத்திரமே கட்டுப்படுத்த முடியும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
இது குறித்து கருத்து வெளியிட்ட அவர்,
மூன்றாவது தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில், இதுவே மாற்று வழியாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
நேற்றைய நிலவரப்படி, நாட்டில் மேலும் 78 பேர் ஒமிக்ரான் தொற்றாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இலங்கையில் இதுவரை ஒமிக்ரானால், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 283 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.