தேசிய ரீதியில் சாதனை ஆற்றிய கலைஞர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வு யாழில்!

தேசிய மரபுரிமைகள் அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் விதுல விக்கிரம நாயக்கவின் பங்குபற்றுதலுடன் நாடு தழுவிய ரீதியில் கலைஞர்களுக்கான கௌரவிப்பு இடம்பெற்றது.

இந்நிகழ்வு இன்று பிற்பகல் 4 மணியளவில் கோண்டாவில், அவுஸ்ரேலிய மற்றும் இலங்கையின் நட்புறவை மேம்படுத்தும் அமைப்பினால் உருவாக்கப்பட்ட சுருதிலயா சேத்திரம் கலை அமைப்பினால் இடம்பெற்றது.

இதன்போது, மூத்த கலைஞர்களிற்கும், தேசிய ரீதியில் சாதனை படைத்த கலைஞர்களிற்கும்இராஜாங்க அமைச்சரால் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

பாரம்பரிய இசை நிகழ்வுகளும் இதன் போது இசைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில், இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, நாதஸ்வர கலைஞர்கள், திரைப்பட கலைஞர்கள், பேராசிரியர் எச்.எம்.டி ஆர்.ஹேரத் தலைவர் மலையக அபிவிருத்தி, நந்த மக்கென்வெல பிரதி தலைவர் மலையக அபிவிருத்தி, மத தலைவர்கள், பொலிஸ் அதிகாரிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இனமத பேதமின்றி தேசிய ரீதியாக சாதனைகளை ஆற்றிய கலைஞர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வு முதன்முறையாக இவ் அமைப்பால் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *