நாட்டை முடக்கும் தீர்மானம் இல்லை!

தற்போதைய கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் நாட்டை முழுமையாக முடக்குவதற்கான எந்த தீர்மானமும் இல்லை என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

எனினும் நடமாட்டக்கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொவிட் 19 பரவல் செயலணி உட்பட மேலும் சில தரப்பினர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுடன் இன்று நடத்திய கலந்துரையாடலின் பின்னர் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *