
இன்று (13) நள்ளிரவு முதல் இரண்டு வாரங்களுக்கு மாகாணங்களுக்கு இடையில் பயணத்தடை விதிக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன், மாகாணங்களுக்கு இடையிலான பொதுப்போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்படவுள்ளதாக இராணுவத் தளபதி அறிவித்துள்ளார்.
எனினும், விவசாயம், துறைமுகம், ஆடை கைத்தொழில் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு இந்த பயணத்தடை பொருந்தாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
குறித்த துறைகளை சார்ந்தவர்களை பணி இடங்களுக்கு அழைப்பது தொடர்பில் நிறுவனத் தலைவர்கள் தீர்மானிக்க முடியும் எனவும் இராணுவத் தளபதி கூறியுள்ளார்.
இதேவேளை, பொது இடங்களில் நடமாடும் போது, இரண்டு கொரோனா தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டதை உறுதிப்படுத்தும் அட்டையை கட்டாயமாக வைத்திருக்க வேண்டும் எனவும் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா கூறினார்.
செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதுடன், இதனை உறுதிப்படுத்தும் வகையில், பொது இடங்களில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.