
இன்று நள்ளிரவு முதல் இரண்டு வாரங்களுக்கு மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு கடுமையான முறையில் நடைமுறைப்படத்தப்படும் என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கொவிட் 19 பரவலை கட்டுப்படுத்தும் ஜனாதிபதி செயற்குழுவிற்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதிக்கு பின்னர் கொவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்டமையை உறுதி செய்வதற்கான அடையாள அட்டை இல்லாத 30 வயதிற்கு மேற்பட்டவர்கள் பொது இடங்களில் வைத்து பரிசோதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.