நாட்டில் மேலும் 2 ஆயிரத்து382 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு வெளியிட்டுள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்மைய நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 347,500 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 2ஆயிரத்து 173 பேர் குணமடைந்துள்ளனர்.
இதற்கமைய, நாட்டில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 304, 628 ஆக அதிகரித்துள்ளது.