கியூபாவில் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஐந்து இலட்சத்தைக் கடந்தது!

கியூபாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, ஐந்து இலட்சத்தைக் கடந்தது.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கியூபாவில் ஐந்து இலட்சத்து 216பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 49ஆவது நாடாக விளங்கும் கியூபாவில் இதுவரை மூவாயிரத்து 842பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், எட்டாயிரத்து 312பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 85பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 44ஆயிரத்து 88பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 473பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக நான்கு இலட்சத்து 52ஆயிரத்து 286பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *