செஞ்சோலையில் இலங்கை விமானப்படையின் குண்டு வீச்சினால் இனப்படுகொலை செய்யப்பட்ட 54 மாணவிகள், 7 பணியாளர்கள் உட்பட 61 தமிழ் உறவுகளின் 15 வது ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
செஞ்சோலை இனப்படுகொலை, 150 ற்கும் மேற்பட்ட மாணவிகளைப் படுகாயப்படுத்திய போர்க் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை நிகழ்த்திய இலங்கை அரசின் குற்றவாளிகளைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துவோம் என தமிழ்த் தேசிய கட்சி (த.தே.க) வலியுறுத்தியுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம் செஞ்சோலை வளாகத்தில் படுகொலை செய்யப்பட்ட எம் தமிழ் உறவுகளுக்கு எமது கண்ணீர் அஞ்சலி செலுத்துவதாக மேலும் தெரிவித்துள்ளனர்.