இன, மத பேதமின்றி கறுப்புக் கொடியை ஏற்றுங்கள் – பேராயர் அழைப்பு

ஈஸ்டர் தாக்குதலுக்கு இடம்பெற்ற சூழ்ச்சி போலவே, அந்த தாக்குதலில் தொடர்புடையவர்களை தண்டிப்பதை தவிர்ப்பதற்கும் சூழ்ச்சி நடைபெற்று வருவதாக கொழும்பு மறை மாவட்ட ‍பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணை நடத்திய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாது, அதனை ஆராய்வதற்கு ஒரே கட்சியைச் சேர்ந்த ஆறு அமைச்சர்கள் கொண்ட உப குழுவொன்றை நியமித்திருப்பது நியாயமானது இல்லை என்றும் கூறினார்.

ஆகவே எதிர்வரும் 21 ஆம் திகதியன்று தேவாலயங்கள், வீடுகள், கடைகள், வாகனங்கள் ஆகியவற்றில் கறுப்பு கொடி ஏந்துமாறு இன,மத, மொழி பேதமின்றி சகலரையும் ஒன்றிணையுமாறு பேராயர் அழைப்பு விடுத்தார்.

உள்நாட்டுக்குள்ளேயே எதிர்ப்புக்களை தெரிவித்துவந்த நாம் இனிவரும் காலங்களில் சர்வதேச ரீதியாக தீர்வைப் பெற்றுக் கொள்வதற்கு தயாரகவுள்ளதாகவும் பேராயர் குறிப்பிட்டார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக கொழும்பு பேராயர் இல்லத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின்‍போதே பேராயர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *