நாட்டில் நேற்று முன்தினம் (12) மேலும் 155 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி 85 ஆண்களும் 70 பெண்களும் இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன், இதுவரை மொத்தமாக 5,775 பேர் நாட்டில் கொவிட் தொற்றால் மரணமடைந்துள்ளனர்.
30 வயதிற்கு கீழ் 3 பெண்களும் 30 முதல் 59 வயதிற்கிடைப்பட்டோரில் 27 ஆண்கள் 17 பெண்கள் என 41 பேரும், 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோரில் 58 ஆண்கள், 53 பெண்கள் என, 111 பேர் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.