ஆற்றில் குதித்த இளைஞன் சடலமாக கண்டெடுப்பு- மட்டக்களப்பில் சம்பவம்

மட்டக்களப்பு- கிரான் பகுதியிலுள்ள பெண்டுகள்சேனை ஆற்றில் குதித்த இளைஞன், சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் கிரான் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய குலேந்திரன் இந்திரன் என்பவரே  உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, பெண்டுகள்சேனை- பூலாக்காடு வயல் பகுதியில், மண் ஏற்றச் சென்றபோது, வயல் பகுதியில் நின்றோர் மண் ஏற்றியவர்களை துரத்தியபோது, குறித்த இளைஞன் ஓடிச் சென்று அருகிலுள்ள ஆளமான ஆற்றில் குதித்துள்ளார்.

இவ்வாறு ஆற்றில் குதித்தவர் பின்னர் சடலமாகவே கண்டெடுக்கப்பட்டார் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் வாழைச்சேனைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *