மூன்று மாத கால இடைவெளிக்குப் பின்னர் இந்திய சுற்றுலா பயணிகளை இலங்கைக்கு வரவழைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கடுமையான சுகாதார வழிகாட்டுதல்கள் மற்றும் முன்அனுமதி என்பனவற்றை பெற்றதன் பின்னர் இ;வ்விடயம் அமுல்படுத்தப்படவுள்ளது.
டெல்டா வைரஸ் தொற்று இனம் காணப்பட்டதன் பின்னர் கடந்த மே மாதம் முதல் இந்திய சுற்றுலா பயணிகளின் வருகை கட்டுப்படுத்தப்பட்டது.
அண்மையில் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட தனிமைப்படுத்தல் வழிகாட்டலுக்கு அமைய முழு அளவிலான தடுப்பூசியினை பெற்று இந்தியாவில் இருந்து வரும் வெளிநாட்டு பயணிகள், வெளிவிவகார அமைச்சு மற்றும் சிவில் விமான அதிகார சபையின் அனுமதியினை பெற வேண்டும்.
அத்துடன் இந்திய பயணிகள் பி.சி.ஆர் பரிசோதனைக்கும் உட்படுத்தப்படுவர்.
இந்நிலையில், மும்பாய், பெங்களுர் மற்றும் சென்னை ஆகிய நகரங்களுடனான பயணிகள் சேவையினை உடனடியாக ஆரம்பிக்க ஸ்ரீலங்கன் விமான சேவை முன்வந்துள்ளது.
இது தவிர, புது டெல்லி மற்றும் ஹயிட்ராபாட் ஆகிய நகரங்களுடனான பயணிகள் சேவைகளையும் ஸ்ரீலங்கன் விமான சேவை ஆரம்பிக்கவுள்ளது.