மன்னாரில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் ஒருவர் உயிரிழப்பு

மன்னாரில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதற்கமைய உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.

இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் ரி.வினோதன் மேலும் கூறியுள்ளதாவது, “கடந்த 9ஆம் திகதி, மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட  கீரி பகுதியைச் சேர்ந்த( 77 வயது) வயோதிபர் ஒருவர், நிமோனியா காய்ச்சல் காரணமாக சிகிச்சை பலன் இன்றி, இன்று உயிரிழந்துள்ளார்.

மேலும் கடந்த 1 ஆம் திகதி தொடக்கம் நேற்று வரையிலான காலப்பகுதியில் மன்னார் மாவட்டத்தில் 220 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை மாவட்டத்தில்  இதுவரை 1,261 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *