நேற்று முன்தினம் (12) இரணைதீவில் இடம்பெற்ற படகு கவிழ்ந்ததில் காணாமல் போன மீனவர் இன்றைய தினம் (14) மண்டைதீவு கடற்பரப்பில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மன்னாரைச் சேர்ந்த குறித்த நபர் யாழ்;ப்பாணம் – குருநகரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்து நேற்று முன்தினம் (12) கடற்றொழிலுக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் அவர்கள் தொழிலுக்கு சென்ற படகு இரணைதீவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
அதில் பயணித்த மூவரில் இருவர் நீந்திக் கரையேறிய நிலையில் மற்றையவர் காணாமல் போயிருந்தார்.
காணாமல் போனவரை தேடும் பணியினை கடற்படையினர் முன்னெடுத்திருந்தனர்.
இன்று (14) மண்டைதீவு கடற்பரப்பில் மிதந்து கொண்டிருந்த நிலையில் அவரது சடலம் கடற்படையினர் மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.