கொரோனா வைரஸ் தொற்று மேலும் பரவுவதை கட்டுப்படுத்த திங்கட்கிழமை முதல் சுயமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு மக்கள் செல்ல வேண்டுமென பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
மிகவும் ஆபத்தான கொரோனா தொற்றுநோயான டெல்டா மாறுபாடு காரணமாக நாடு ஒரு பேரழிவு தரும் சூழ்நிலையில் மூழ்கி இருக்கின்றது.
எனினும் இத்தகைய தருணத்தில், கட்டுப்பாட்டு விதிகளை அறிவிக்காததற்காக அரசாங்கத்தால் கடும் ஏமாற்றமடைந்துள்ளதாகவும் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தங்கள் குளிரூட்டப்பட்ட அறையில் இருந்து வெளியே வந்து, நாட்டின் உண்மை நிலையை அறிந்துகொண்டு முடிவுகளை எடுக்குமாறு அவர் வலியுறுத்தினார்.
எங்கள் ஆலோசனையையும் மருத்துவ நிபுணர்களின் கருத்தையும் அவர்கள் தொடர்ந்து புறக்கணிப்பதால் கட்டுப்பாடுகள் அல்லது ஊரடங்கு விதிக்க நாங்கள் இனி அரசாங்கத்தை வலியுறுத்த மாட்டோம் என தெரிவிவத்தார்.
அதனால் தான் திங்கட்கிழமை முதல் குறைந்தபட்சம் ஏழு நாட்களுக்கு சுகாதார வழிகாட்டுதல்கள் மற்றும் நடைமுறைகளை கடைப்பிடித்து, வார அடுத்த ஏழு நாட்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்துகொண்டு உங்களுக்கு நீங்களே கட்டுப்பாட்டை விதித்துக்கொள்ளுங்கள் என்றார்.
வரும் நாட்களில் கொரோனா வழக்குகள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை கடுமையாக உயரும் என்பது உறுதி என்றும் எச்சரித்துள்ளார்.