பொது சுகாதார ஆய்வாளர்களை தாக்கிய 2 பேர் கைது!

இரண்டு பொது சுகாதார ஆய்வாளர்களை தாக்கியதாக இரண்டு பேரை டிக்வெல்ல போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும் அந்த பிரதேசத்தில் கொரோனா தொற்றினால் ஒருவர் இறந்த பின்னர் அவரது நண்பர்களை தனிமைப்படுத்தியபோது ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து சந்தேக நபர்கள் பொது சுகாதார அதிகாரிகளை தாக்கியதாக போலீஸ் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

அத்தோடு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *