யாழ்ப்பாணம் – உரும்பிராய் பகுதியில் உள்ள வீடொன்றில் வன்முறை கும்பலொன்று பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தியுள்ளது. குறித்த தாக்கதலில் வீட்டின் முன்னால் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளொன்று தீக்கிரை ஆகியுள்ளது. சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.