இங்கிலாந்தில் 16 மற்றும் 17 வயதுடையவர்களுக்கு ஓகஸ்ட் 23க்குள் தடுப்பூசி !

இங்கிலாந்தில் உள்ள 16 மற்றும் 17 வயதுடையவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட உள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அதேநேரம் ஒகஸ்ட் 23 ஆம் திகதிக்குள் தடுப்பூசிக்கான முன்பதிவு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் அடுத்த மாதம் பாடசாலைகள் அல்லது கல்லூரியைத் தொடங்குவதற்கு முன், இளைஞர்கள் பாதுகாப்பைப் பெற முடியும் என சுகாதார செயலாளர் கூறியுள்ளார்.

16 மற்றும் 17 வயதிற்குட்பட்ட இளைஞர்களுக்கு இந்த மாத தொடக்கத்தில் முதலாவது டோஸ் தடுப்பூசியை செலுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் முதியவர்களை போல இவர்களுக்கு இரண்டு டோஸ் தடுப்பூசிகளை செலுத்த இதுவரை திட்டமிடப்படவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *