இந்தியாவில் புதிதாக 36,083 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிப்பு

இந்தியாவில் புதிதாக 36, 083 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, கடந்த 24 மணி நேரத்தில்  493 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

இதற்கமைய  உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,31,225 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கிடைய புதிதாக 36,083 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,13,76,015 ஆக காணப்படுகின்றது.

இந்நிலையில் நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு  வைத்தியசாலைகளில் 3,85,336 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply