காட்டுத் தீயை அணைக்க வந்த விமானம் விழுந்து நொறுங்கியது 8 பேர் பலி

துருக்கியில் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த விமானம் விழுந்து நொறுங்கியதில் 8 பேர் உயிரிழந்தனர்.

தெற்குப் பகுதியில் உள்ள பெர்டிஸ் ஏற்பட்ட காட்டுத் தீயை அணைப்பதற்காக பெரிவ் BE-200 என்ற விமானத்தை ரஷ்யாவிடமிருந்து, துருக்கி கடனாக பெற்றிருந்தது.

இந்நிலையில் தண்ணீரை வனப்பகுதியில் ஊற்றுவதற்காக விமானம் சென்று கொண்டிருந்த போது, புகை மூட்டம் காரணமாக அங்கிருந்த மலைமுகட்டில் மோதி பெரிவ் விமானம் விழுந்து நொறுங்கியதாகக் கூறப்படுகிறது.

இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்ததாகவும் துருக்கி அரசு தெரிவித்துள்ளது.

Leave a Reply