கிளிநொச்சியில் கிணற்றுக்குள் காணப்படும் சடலம் தொடர்பில் விசாரணையை ஆரம்பித்துள்ள பொலிஸார்

கிளிநொச்சி- இரத்தினபுரம் பகுதியில் பராமரிப்பின்றி காணப்படும் கிணற்றில் மிதக்கும்  சடலம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த கிணறுள்ள காணியின் உரிமையாளர், அப்பகுதிக்கு சென்றிருந்த வேளையில்  கிணற்றினுள் பாய் ஒன்றில் சுற்றியவாறு சடலம் ஒன்று காணப்படுவதை அவதானித்துள்ளார். அதனைத் தொடர்ந்து  கிளிநொச்சி பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

குறித்த தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு வருகைதந்த குற்றவியல் பொலிஸார் கொலை செய்யப்பட்டிருக்கலாம்  என்ற கோணத்தில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை இன்றைய தினம் (திங்கட்கிழமை) தடயவியல் பொலிஸார் மேலதிக  விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளனர்.

குறித்த சடலம் சில நாட்களுக்கு முன்னர் போடப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுவதுடன் ஆண் ஒருவருடையதாக இருக்கலாம் என்றும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply