டெல்டா வைரஸ் திரிபு வேகமாக பரவுகின்றமையால், பொதுமக்கள் வீட்டிலும் முகக்கவசம் அணிய வேண்டியது கட்டாயமானதாகும் என சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
வைரஸ் தொற்று ஏற்படுவதற்கு 15 விநாடிகள் என்ற சிறிதளவான காலமே எடுக்கும்.
அந்தக் காலப்பகுதிக்குள் ஒருவருக்கு தொற்று ஏற்படக்கூடும்.
தற்போதைய நிலையில், இயன்ற அனைத்து சந்தர்ப்பங்களிலும், பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று விசேட வைத்தியர் தீபால் பெரேரா வலியுறுத்தியுள்ளார்.


