புதிய பொலிஸ் ஊடகப்பேச்சாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ நியமிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நியமனம் பொலிஸ்மா அதிபர் சந்தன விக்கிரமரத்னவினால் இன்று (16) வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இன்று (16) முற்பகல் வரை பொலிஸ் ஊடக பேச்சாளராக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண, பணியாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



