யாழ். தென்மராட்சி, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனாத் தொற்றாளர் ஒருவர் இன்று (17) காலை தப்பியோடியுள்ளார்.
கோப்பாய் பகுதியை சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரே தப்பியோடியவராவார்.
அவர் கடந்த ஒரு வாரமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


