இந்தியாவைப் போன்று இலங்கையும் மாற்றம் அடைவதாகவே தற்கால சூழ்நிலையில்,மக்கள் பேசுபொருளாக கொண்டுள்ளனர்.
இலங்கையில் கொரோனா தொற்று அதி தீவிரமடைந்துள்ளது.
கொரோனா நோயாளிகள் வைத்தியசாலையில் மட்டுமின்றி, வீடு, வீதி, பேரூந்து, என நிற்கும் இடங்களில் செத்து மடிகின்றனர்.
இந்நிலையில், விஸ்வமடு – றெட்பானாவில் அமைந்துள்ள வெதுப்பகம் ஒன்றுக்கு, இன்று புதன்கிழமை காலை விறகு வெட்டச் சென்ற நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அதன்படி, விஸ்வமடு – வள்ளுவர்புரத்தைச் சேர்ந்து மூன்று; பிள்ளைகளின் தந்தையான 41 வயதுடைய சமரகோன் என்பவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர், விறகு வெட்டிக்கொண்டிருந்த நிலையில், வாயாலும் மூக்காலும் இரத்தம் வடிந்து, கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக, விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.


