நாட்டை முடக்குமாறு அஸ்கிரி – மல்வத்து தேரர்கள் கோரிக்கை

கொரோனா தொற்றை கட்டுப்பாடுத்துவதற்காக ஒருவார காலம் நாட்டை முடக்குமாறு அஸ்கிரி – மல்வத்து தேரர்கள் ஜனாதிபதிக்கு கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.

கொரோனா தடுப்பூசி வழங்குவதன் மூலம் மக்களின் உயிர்களைப் பாதுகாப்பதற்கான முயற்சிக்காக ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் அவர்கள் பாராட்டியுள்ளனர்.

இருப்பினும் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவி வருவதால், ஒட்டுமொத்த மக்களும் இன்று பேரழிவை எதிர்கொள்வதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த நேரத்தில் மக்களின் உயிர்களைக் காப்பாற்றுவதற்காக, சுகாதார நிபுணர்களின் ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில் குறைந்தது ஒரு வார காலம் நாட்டை மூடி நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply