<!–
யாழ்ப்பாணத்தில் மேலும் 5 பேர், கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
நேற்று (வியாழக்கிழமை), யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மானிப்பாய்- சுதுமலை வடக்கைச் சேர்ந்த (92 வயது) ஆண் ஒருவரும் உரும்பிராயைச் சேர்ந்த (86 வயது) ஆண் ஒருவரும் மானிப்பாயைச் சேர்ந்த (85 வயது) ஆண் ஒருவரும் கைதடியைச் சேர்ந்த (43 வயது) ஆண் ஒருவரும் அளவெட்டியைச் சேர்ந்த (68 வயது) பெண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதன்படி, யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 192ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.


