யாழில் இராணுவத்தினர் ஏற்பாட்டில் இரத்த தான முகாம்

கொரோணா காலத்தில் ஏற்படும் குருதி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் இராணுவத்தினரால் குருதி வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று (20) காலை இடம்பெற்றது.

யாழ். மாவட்ட இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் கொடிதுவக்கு தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட குருதி வழங்கும் நிகழ்வில் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் கலந்துகொண்டு குருதியை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *